Main pages

Surah The Calamity [Al-Qaria] in Tamil

Surah The Calamity [Al-Qaria] Ayah 11 Location Maccah Number 101

ٱلْقَارِعَةُ ﴿١﴾

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).

مَا ٱلْقَارِعَةُ ﴿٢﴾

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ ﴿٣﴾

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?

يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ ﴿٤﴾

அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ ﴿٥﴾

மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ ﴿٦﴾

எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-

فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ ﴿٧﴾

அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ ﴿٨﴾

ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-

فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ ﴿٩﴾

அவன் தங்குமிடம் \"ஹாவியா\" தான்.

وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ ﴿١٠﴾

இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

نَارٌ حَامِيَةٌۢ ﴿١١﴾

அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.