Main pages

Surah Alms Giving [Al-Maun] in Tamil

Surah Alms Giving [Al-Maun] Ayah 7 Location Maccah Number 107

أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ ﴿١﴾

(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?

فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ ﴿٢﴾

பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ﴿٣﴾

மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.

فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ ﴿٤﴾

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ﴿٥﴾

அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ ﴿٦﴾

அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ ﴿٧﴾

மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.