Main pages

Surah The earthquake [Al-Zalzala] in Tamil

Surah The earthquake [Al-Zalzala] Ayah 8 Location Madanah Number 99

إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا ﴿١﴾

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது

وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا ﴿٢﴾

இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-

وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا ﴿٣﴾

\"அதற்கு என்ன நேர்ந்தது?\" என்று மனிதன் கேட்கும் போது-

يَوْمَئِذٍۢ تُحَدِّثُ أَخْبَارَهَا ﴿٤﴾

அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.

بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا ﴿٥﴾

(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.

يَوْمَئِذٍۢ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًۭا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ ﴿٦﴾

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًۭا يَرَهُۥ ﴿٧﴾

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍۢ شَرًّۭا يَرَهُۥ ﴿٨﴾

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.