Settings
Surah The Mansions of the stars [Al-Burooj] in Tamil
وَٱلسَّمَاۤءِ ذَاتِ ٱلۡبُرُوجِ ﴿1﴾
கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَٱلۡیَوۡمِ ٱلۡمَوۡعُودِ ﴿2﴾
இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
وَشَاهِدࣲ وَمَشۡهُودࣲ ﴿3﴾
மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
قُتِلَ أَصۡحَـٰبُ ٱلۡأُخۡدُودِ ﴿4﴾
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.
ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ ﴿5﴾
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
إِذۡ هُمۡ عَلَیۡهَا قُعُودࣱ ﴿6﴾
அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
وَهُمۡ عَلَىٰ مَا یَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِینَ شُهُودࣱ ﴿7﴾
முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
وَمَا نَقَمُوا۟ مِنۡهُمۡ إِلَّاۤ أَن یُؤۡمِنُوا۟ بِٱللَّهِ ٱلۡعَزِیزِ ٱلۡحَمِیدِ ﴿8﴾
(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
ٱلَّذِی لَهُۥ مُلۡكُ ٱلسَّمَـٰوَ ٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَیۡءࣲ شَهِیدٌ ﴿9﴾
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
إِنَّ ٱلَّذِینَ فَتَنُوا۟ ٱلۡمُؤۡمِنِینَ وَٱلۡمُؤۡمِنَـٰتِ ثُمَّ لَمۡ یَتُوبُوا۟ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِیقِ ﴿10﴾
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
إِنَّ ٱلَّذِینَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمۡ جَنَّـٰتࣱ تَجۡرِی مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَـٰرُۚ ذَ ٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِیرُ ﴿11﴾
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِیدٌ ﴿12﴾
நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
إِنَّهُۥ هُوَ یُبۡدِئُ وَیُعِیدُ ﴿13﴾
நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ ﴿14﴾
அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِیدُ ﴿15﴾
(அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன்.
فَعَّالࣱ لِّمَا یُرِیدُ ﴿16﴾
தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
هَلۡ أَتَىٰكَ حَدِیثُ ٱلۡجُنُودِ ﴿17﴾
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
فِرۡعَوۡنَ وَثَمُودَ ﴿18﴾
ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
بَلِ ٱلَّذِینَ كَفَرُوا۟ فِی تَكۡذِیبࣲ ﴿19﴾
எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
وَٱللَّهُ مِن وَرَاۤىِٕهِم مُّحِیطُۢ ﴿20﴾
ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
بَلۡ هُوَ قُرۡءَانࣱ مَّجِیدࣱ ﴿21﴾
(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
فِی لَوۡحࣲ مَّحۡفُوظِۭ ﴿22﴾
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
English
Chinese
Spanish
Portuguese
Russian
Japanese
French
German
Italian
Hindi
Korean
Indonesian
Bengali
Albanian
Bosnian
Dutch
Malayalam
Romanian