Settings
Surah The Overwhelming [Al-Ghashiya] in Tamil
هَلۡ أَتَىٰكَ حَدِیثُ ٱلۡغَـٰشِیَةِ ﴿1﴾
சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
وُجُوهࣱ یَوۡمَىِٕذٍ خَـٰشِعَةٌ ﴿2﴾
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
عَامِلَةࣱ نَّاصِبَةࣱ ﴿3﴾
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
تَصۡلَىٰ نَارًا حَامِیَةࣰ ﴿4﴾
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
تُسۡقَىٰ مِنۡ عَیۡنٍ ءَانِیَةࣲ ﴿5﴾
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
لَّیۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِیعࣲ ﴿6﴾
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
لَّا یُسۡمِنُ وَلَا یُغۡنِی مِن جُوعࣲ ﴿7﴾
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
وُجُوهࣱ یَوۡمَىِٕذࣲ نَّاعِمَةࣱ ﴿8﴾
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
لِّسَعۡیِهَا رَاضِیَةࣱ ﴿9﴾
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
فِی جَنَّةٍ عَالِیَةࣲ ﴿10﴾
உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
لَّا تَسۡمَعُ فِیهَا لَـٰغِیَةࣰ ﴿11﴾
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
فِیهَا عَیۡنࣱ جَارِیَةࣱ ﴿12﴾
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
فِیهَا سُرُرࣱ مَّرۡفُوعَةࣱ ﴿13﴾
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
وَأَكۡوَابࣱ مَّوۡضُوعَةࣱ ﴿14﴾
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
وَنَمَارِقُ مَصۡفُوفَةࣱ ﴿15﴾
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
وَزَرَابِیُّ مَبۡثُوثَةٌ ﴿16﴾
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
أَفَلَا یَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَیۡفَ خُلِقَتۡ ﴿17﴾
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
وَإِلَى ٱلسَّمَاۤءِ كَیۡفَ رُفِعَتۡ ﴿18﴾
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
وَإِلَى ٱلۡجِبَالِ كَیۡفَ نُصِبَتۡ ﴿19﴾
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
وَإِلَى ٱلۡأَرۡضِ كَیۡفَ سُطِحَتۡ ﴿20﴾
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
فَذَكِّرۡ إِنَّمَاۤ أَنتَ مُذَكِّرࣱ ﴿21﴾
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
لَّسۡتَ عَلَیۡهِم بِمُصَیۡطِرٍ ﴿22﴾
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ﴿23﴾
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
فَیُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ ﴿24﴾
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
إِنَّ إِلَیۡنَاۤ إِیَابَهُمۡ ﴿25﴾
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
ثُمَّ إِنَّ عَلَیۡنَا حِسَابَهُم ﴿26﴾
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.
English
Chinese
Spanish
Portuguese
Russian
Japanese
French
German
Italian
Hindi
Korean
Indonesian
Bengali
Albanian
Bosnian
Dutch
Malayalam
Romanian