Settings
Surah The morning hours [Ad-Dhuha] in Tamil
وَٱلضُّحَىٰ ﴿1﴾
முற்பகல் மீது சத்தியமாக
وَٱلَّیۡلِ إِذَا سَجَىٰ ﴿2﴾
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿3﴾
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
وَلَلۡـَٔاخِرَةُ خَیۡرࣱ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ ﴿4﴾
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
وَلَسَوۡفَ یُعۡطِیكَ رَبُّكَ فَتَرۡضَىٰۤ ﴿5﴾
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
أَلَمۡ یَجِدۡكَ یَتِیمࣰا فَـَٔاوَىٰ ﴿6﴾
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
وَوَجَدَكَ ضَاۤلࣰّا فَهَدَىٰ ﴿7﴾
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
وَوَجَدَكَ عَاۤىِٕلࣰا فَأَغۡنَىٰ ﴿8﴾
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
فَأَمَّا ٱلۡیَتِیمَ فَلَا تَقۡهَرۡ ﴿9﴾
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
وَأَمَّا ٱلسَّاۤىِٕلَ فَلَا تَنۡهَرۡ ﴿10﴾
யாசிப்போரை விரட்டாதீர்.
وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ ﴿11﴾
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
English
Chinese
Spanish
Portuguese
Russian
Japanese
French
German
Italian
Hindi
Korean
Indonesian
Bengali
Albanian
Bosnian
Dutch
Malayalam
Romanian